BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday 16 October 2012

கணவன் மனைவி - பாலியல் இயற்கை மருத்துவக் குறிப்புகள்



[ மலட்டுத்தனம் நீங்க வேண்டுமா? - வெள்ளை ஒழுக்கு நிற்க வேண்டுமா? - கருவுற்ற பெண்கள் வாந்தி நிற்க - பிரசவ வேதனை குறைய வேண்டுமா? - முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமா? - ஆண்மை பலகீனமா? - வெள்ளை, வெட்டை – பால்வினை நோய் நீங்க - மாதவிலக்கு ஒழுங்காக வேண்டுமா? –விதை வீக்கம் தணிய - அரைக்கரப்பான் வந்துவிட்டால் - மறைவான ரணங்கள் ஆற - 
உடல் அழகு பெற சிம்பிள் மெத்தேட் - கருச்சிiவு அடிக்கடி ஏற்படுகிறதா? - மசக்கை காலத்தில் வயிற்று வலியா? -மாதவிலக்குத் தள்ளிப்போக வேண்டுமா? - உற்ற வயதில் பருவமடையாவிட்டால் - ஹிஸ்டீரியா நோய் குணமாக - மார்பகங்கள் தேர்ச்சி பெற - பால் பெருக இலகு வைத்தியம் - திருமணம் நிச்சயமாகிவிட்டதா?தேன் நிலவுக் காலங்களில் - இரத்தத்தின் தூய்மைக்கும் சுறுசுறுப்புக்கும் - துரித ஸ்கலிதத்தை நிறுத்த வேண்டுமா? - விந்து கெட்டிப்பட வேண்டுமா? - விந்து பெருக வேண்டுமா? - நரம்புத் தளர்ச்சி வந்துவிட்டதா? - கனவில் அடிக்கடி விந்து வெளியேறுவதை தடுப்பது எப்படி? - ஆண்குறி உறுதிப்பட வேண்டுமா? - ஆண்குறி பருக்க வேண்டுமா? தாது புஷ்டிக்கு - ஆண்மை பெருக - இச்சையைத் தூண்ட - இல்லற இன்பம் பெற - தளர்ச்சியைப் போக்கிக்கொள்ள.] மலட்டுத்தனம் நீங்க வேண்டுமா?1. புங்கன் வேரைக் கொண்டுவந்து நீர்விட்டு அரைத்து மாதவிலக்கான மூன்றாம் நாள் அல்லது நான்காம் நாள் உள்ளுக்குள் சாப்பிட்டால் மலட்டுப் பூச்சிகள் செத்துவிடும். மலட்டுத்தனமும் நீங்கும்.2. வேப்பங்கொழுந்து, வெள்ளைப்புண்டு, மிளகு, வசம்பு இவைகளைச் சம அளவு எடுத்து அரைத்து மாதவிலக்கு மூன்று நாட்களிலும் ஒரு கோலிகுண்டு அளவு விழுங்கி வந்தால், பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பம் தரிக்கும். ஆனால், இதை தொடர்ந்தார்ப்போல் மூன்று மாதவிலக்குகளுக்கு சாப்பிட்டு வரவேண்டும். வெள்ளை ஒழுக்கு நிற்க வேண்டுமா?ஒரு கைப்பிடி முட்கா வேளை இலையும், பத்து மிளகும், ஒரு சிட்டிகை ஜீரகமும் எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சங்காய் அளவு கெட்டி எருமைத் தயிரில் கலந்து குடிக்க வேண்டும். காரம், புளி உணவில் சேர்க்கக்கூடாது. வறுத்த உப்பு சேர்த்து தயிர் சோறு சாப்பிட்டு வர வேண்டும். சில நாட்களில் சரியாகிவிடும். கருவுற்ற பெண்கள் - வாந்தி நிற்க :புளிப்பு கிச்சலித் தோல் உலர்ந்தது எடுத்து 75 கிராம் ஒரு லிட்டர் கொதிக்கிற தண்ணீரில் போட்டு 12 மணி நேரம் வைத்திருந்து தோலை எடுத்து விட்டு பத்து நிமிடம் காய்ச்சி, கொதிக்கும் பொழுது ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து ஷர்பத் செய்து வைத்துக்கொள்ளவும். வேளை ஒன்றுக்கு 1 ஸ்பூன் அளவு இதை சாப்பிட்டு வந்தால் கருவுற்ற பெண்களின் வாந்தி நின்றுவிடும். பிரசவ வேதனை குறைய வேண்டுமா?மாலதி மலர்ச்செடியின் வேரைக் கொண்டு வந்து சுத்தம் செய்து, கட்டி மோருடன் கலந்து உபயோகித்தால் பிரசவ வேதனை குறையும், சுகப்பிரசவமாகும். முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமா?பசும்பாலைக் காய்ச்சினால் மேலே ஏடு படியும். இதை எடுத்து முகத்தின் மீது தடவி வரலாம். இவ்விதம் சில நாட்கள் தடவி ஊற வைத்துக் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும். ஆண்மை பலகீனமா?திடீரென்று ஒரு குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனதில் உள்ள ஒருவித பயம். தகாத எண்ணம். வாதம் போன்ற நோய்களுக்கு தாளகம், மனோசிலை போன்ற சுத்தம் செய்யாத மருந்துகளை அருந்துவதுதான் காரணமாகும். வெள்ளை, வெட்டை – பால்வினை நோய் நீங்க :ஆனை நெருஞ்சியிலை தழையைச் சுத்தம் செய்து நீராகாரத்தில் தேய்க்க வழுவழுப்பான பொருள் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வெள்ளை வெட்டை நீங்கும். மாதவிலக்கு ஒழுங்காக வேண்டுமா?வெங்காயப் பூவை நன்றாக உலரவைத்து, இடித்துத் தூள் செய்து தினசரி ஒரு சிட்டிகை அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிலக்கு ஒழுங்காக ஆகும். ஒரு வாரமாவது குடித்து வர வேண்டும். விதை வீக்கம் தணிய :1. பலாப்பூவை நசுக்கி, சற்று வேக வைத்து விதை வீக்கமுள்ள இடத்தில் பற்றிட்டு வந்தால் விதை வீக்கம் தணியும்.2. பவழமல்லிப் பூவைக் கொண்டு வந்து வதக்கி வைத்துக் கட்டினால் விi வீக்கம் குறைந்து வரும். சீக்கிரத்தில் சரியாகிவிடும். அரைக்கரப்பான் வந்துவிட்டால் :தொடையின் இடுக்குகளில் மர்மஸ்தானங்களைப் பற்றிக்கொண்டு உண்டாகும் ஒருவகை சொரிப்புண் இது. இது நீர் சம்பந்தமாக ஏற்படக்கூடியது. கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள் - வகைக்கு ஒரு கிராம் எடுத்து பொடித்து தேங்காய்ப் பாலில் ஊற வைத்து அடுப்பில் ஏற்ற வேண்டும். தண்ணீர் சுண்டி எண்ணெய

0 comments: